AAMF 'ன் அவசரக்கூட்​டம் !


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !


அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக இன்று(14-01-2012)  அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மௌலானா மௌலவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில்,
M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவசர இக்கூட்டத்தில், 


நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் (கஃப்ர்ஸ்தான்) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.


மேலும் இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இறுதியில் மௌலானா மௌலவி அப்துல் காதர் ஆலிம் அவர்களின் துவாவுடன் நிறைவு பெற்றது.


இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
அதிராம்பட்டிணம்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.