அதிரை வாய்க்கால்தெருவின் நிலை



கன்றுக்குட்டி: அம்மா, அம்மா! இப்ப நாம எங்கே இருக்கோம்?

தாய்ப்பசு: இப்ப நாம  வாய்க்கால் தெருவுல இருக்கோம்.

கன்று: இங்க மட்டும் எப்படிமா தினமும் நமக்கு சாப்பாடு கிடைக்குது?

பசு: நாமெல்லாம் பசியோட இருக்கக்கூடாதுனு இங்க உள்ள குப்பையை எல்லாம் அள்ளாம,அப்படியே போட்டு வச்சு  இருக்காங்க....

கன்று: இங்க ஏன்மா பிளாஸ்டிக் பையா..... கிடக்குது? அது உடம்புக்கு கெடுதி தான மா?

பசு: அது உனக்கு புரியுது....ஆறறிவு உள்ள மனுஷனுக்கு புரியலையே...பிளாஸ்டிக் பை ஆபத்துன்னு எவ்ளோ தான் டிவி-ல காட்டினாலும்,பேப்பர்ல போட்டாலும் அத பாத்துட்டும்,கேட்டுட்டும் இந்த பைகளை தான் இன்னும் அதிகமா பயன்படுத்துறாங்க...அது அவங்களுக்கு மட்டுமில்ல எல்லாத்துக்குமே கெடுதி...அதபத்தி அவங்களே கவலைப்படல...உனக்கென்னா!

கன்று: நல்ல வேளை மா...மத்த தெருவுல எல்லாம் கூடைக்குள்ளே குப்பை இருக்குறதுனால என்னால எட்டி எட்டி சாப்பிட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்...ஆனா.. இங்க மட்டும் கூடையில உள்ள குப்பைய அள்ளாம விட்டதால கூடை நெறஞ்சு குப்பை கீழ எல்லாம் கொட்டிக் கிடக்கு....அதனால என்னால ஈஸியா வயிறு நெறைய சாப்பிட முடியுது மா...
ஆமாம்மா...இவ்ளோ கூளமும் சேர்ந்து கெட்ட நாத்தம் வருதே...இவங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகாதா?

பசு: அதெப்புடி ஒன்னும் ஆவாம இருக்கும்? இந்த மாதிரி எடத்துல உற்பத்தியாகுற கொசு தான் இன்னைக்கு ஒலகம் பூரா பரவுற எல்லா நோய்க்கும் காரணம்...

கன்று: அது தெரிஞ்சுமா இப்படி குப்பைய அள்ளாமல் போட்டு வச்சு இருக்காங்க?

பசு: அதுக்கு நம்ம மேல அவங்க வச்சிருக்கிற அன்பு தான் காரணம்..

கன்று: சரிம்மா...இந்த எடம் எப்பைலேந்து இப்புடி இருக்கு?

பசு: நான் குழந்தையா இருக்கறச்ச இப்புடி தான் இருந்துச்சு....நீ பெரியவனா ஆனாலும் இப்புடியே தான் இருக்கும்....

கன்று: அப்போ இது மாறவே மாறாதா மா?

பசு: காலம் மாறினாலும்,ஆட்சி மாறினாலும் இந்த காட்சி மாறாது மா....
ஆக்கம்: அதிரைகுருவி
--------------------------------------------------------------------------------
குறிப்பு:
இதுபோன்று உங்கள் பகுதியில் உள்ள சீர்கேடுகளை அதிரைபூங்காவின் ஈமெயில் முகவரிக்கு எழுதி அனுப்பினால் இன்ஷா அல்லாஹ் பதியப்படும்.

2 comments:

sameer said...

வாய்க்கால்தெருவின் நிலையை பசு கூட புரிந்து கொண்டுள்ளது.இந்த photo-வை பார்த்த பிறகாவது அங்கு குப்பை சுத்தமானால் சரி தான்.

syed hussain said...

பசுவும் கன்றும் நம்மையே ஏளனம் செய்கின்றனவே...உண்மையை கற்பனை கலந்து சொன்ன அதிரைகுருவிக்கு பாராட்டுகள்.

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.