மருந்துகள் பற்றி தெரிந்து கொள்வோம்



ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சில வேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.

எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது
குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.

நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துகளின் தன்மைகளையும், பக்கவிளைவுகளையும் பற்றியும்  இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம்
செய்யக் கூடாது. தவறாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உயிரைக்
குடித்துவிடும்.

சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும். மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் .

ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.

எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு
கொடுப்பது கூடாது. பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல்படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.

அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நாமாக சாப்பிடக் கூடாது.

காலாவதியான மருந்துக்களை தூக்கி எறிந்து விட வேண்டும்.
ஒரு முறை திறந்த Bottle(குப்பி) மருந்துகளை நீண்ட நாள் உபயோகிக்க வேண்டாம். குளிர்பதன பெட்டியில்(refrigerator)  வைத்தால் கூட இரு வாரங்களில் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும்.

மருந்து கொடுக்க சமையல் கரண்டிகளை பயன்படுத்தக் கூடாது. அளவு மாறிவிடும்.

வரட்டு இருமலுக்கு கொடுத்த மருந்தை சளி இருமலுக்கு கொடுக்கக் கூடாது. அதற்கு சளியை வெளி்யேற்றும் வேறு மருந்து உண்டு.

சில மருந்துகளின் பலன் உடனே தெரிவதில்லை. நோய் சீக்கிரம் குணமாக
வேண்டி அதிக அளவு மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியும். குடல் புண்ணாகி விடும்

அனேக ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின் சாப்பிட வேண்டும்.

மருந்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடாமல் தண்ணீருடன் மட்டுமே சாப்பிடவேண்டும்.

மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டும்படி வைக்க வேண்டாம். வீட்டில் மற்றவர்களின் மருந்துகளுடன் சேர்த்தும் வைக்கவேண்டாம்.

நாம் ஏற்கனவே ஏதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ நம் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிட வேண்டும். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார்,மருத்துவர்.

ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது.
உதாரணமாக பல்வலிக்கு பல் மருத்துவரிடம் போகிறீர்கள். அவர் ஒரு வலி நிவாரணி எழுதி தந்து அதை சாப்பிட்டு வருகிறீர்கள். அடுத்து மூட்டு வலிக்கு வேறு மருத்துவரிடம் போய் வலி நிவாரணி மருந்து வாங்கி அதையும் சாப்பிடும்போது மருந்து ஒவர் டோஸ் ஆகிவிடும்.

மருத்துவர் தரும் மருந்துகள் அதே அளவில் அதே நேரத்தில் சாப்பிடவேண்டும்.நோயிலிருந்து சிறிது ஆசுவாசம் கிடைத்ததும் மருந்துகளை நிறுத்தி விடக்கூடாது.

மருத்துவர் ஆலோசனைப்படி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து உண்ணவும்.

சில மருந்துகளை சாப்பிடும்போது சிலருக்கு அலர்ஜி(ஓவ்வாமை) ஏற்படலாம். உடனே அந்த மருந்தை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் சென்று சொல்ல வேண்டும்.

அவசரம் இல்லாத பட்சத்தில் இன்ஜெக்ஸனை விட வாய் வழி மருந்து தான் பாதுகாப்பு.

மருத்துவர் எழுதித்தந்து வாங்கிய மருந்தானாலும் அவரிடம் ஒருமுறை
காட்டி சரி பார்த்துக் கொள்ளவும். போலி மருந்துகள் நிறைய மார்க்கெட்டில்
உள்ளன. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மருத்துவர் மூன்று வேளை மாத்திரை சாப்பிடச் சொன்னால் செலவு
கருதி, இரண்டு மாத்திரை போதும் என்று நாமாக சுருக்கிகொள்வது மிக
ஆபத்தில் போய் முடியும்.

இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து நாம் மருந்து
சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவரிடம் கேளாமல் திடீரெனெ
நிறுத்துவது மிக ஆபத்தாகிவிடும்.

காய்ச்சலுக்கு மருத்துவரிட்ம் செல்கிறீகள். அவர் எழுதி தந்த மருந்தில்
நோய் குணமாகவில்லை, அடுத்தமுறை செல்லும்போது அவர் வேறு மருந்து எழுதி தருவார். இப்போது நாம் புதிய மருந்துடன் மீதமிருக்கும் பழைய மருந்தையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. இப்போது எழுதித் தந்ததையே
தொடர வேண்டும்.

ஒரு நேர மருந்து மறந்து விட்டால் அடுத்த நேரம் சேர்த்து சாப்பிடக்கூடாது, அந்த நேரம் உள்ளது மட்டும் சாப்பிட வேண்டும்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.